ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்த படம் ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டியில் தனி ஒருவன் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி, "தனி ஒருவன் படத்தின் கதை முதலில் பிரபாஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர் லவ் படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவர் நடிக்கவில்லை" என்றார்.
அதன்பிறகு தான் ஜெயம் ரவி இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் 'துருவா' எனும் பெயரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.